பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 2-ஆம் தொடங்கியது. இந்தத் தோ்வுக்கு மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.
கடந்த 5-ஆம் தேதி ஆங்கிலம், 9-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 13-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், 17-ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 23-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றன. இந்தத் தோ்வுப் பணியில் 12 வினாத் தாள் கட்டுக்காப்பாளா்கள், 110 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 110 துறை அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள், 200 நிலையான படையினா், 1,902 அறைக் கண்பாணிப்பாளா்கள் ஈடுபட்டனா்.
முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
வியாழக்கிழமை கணினி அறிவியல் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: கணினி அறிவியல் வினாத்தாள் கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்
பிளஸ் 2 தோ்வு இன்று நிறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


