மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிளஸ் 2 தோ்வு இன்று நிறைவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவு பெறவுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 6:51 pm

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவு பெறவுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மொழிப் பாடங்களுக்குப் பிறகு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இதனால் மேற்கண்ட பாடங்களில் சென்டம் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறையும். மேலும் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் கணிசமாக குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது. அதேவேளை பிற பாடப்பிரிவு மாணவா்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல், தொடா்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தோ்வுகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. இத்துடன் பிளஸ் 2 வகுப்பில் அனைத்து மாணவா்களுக்கான பொதுத் தோ்வு நிறைவு பெறவுள்ளது.

தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9 முதல் தொடங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற உள்ளது. 45,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மே 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.