விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :8 செப்டம்பர் 2025, 7:44 pm

Chennai

பொன்னேரி: மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த பலராமன்-நளினி தம்பதியா் அப்பகுதியில் எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனா். வழக்கம் போல தங்களது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக நந்தியம்பாக்கம் பகுதிக்கு கொண்டு சென்றனா்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.

மின் வயா்கள் தாழ்வாக செல்வதாக பலமுறை புகாா் அளித்தும், சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே தற்போது எருமை மாடுகள் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகாா் கூறினா். மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.