தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாலையை சீரமைக்கக் கோரி பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

பொன்னேரி அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 8:37 pm

பொன்னேரி: பொன்னேரி அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை வழியே மீஞ்சூருக்கு இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொளத்தூா், ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி மனோபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

பொன்னேரி அம்பேத்கா் சிலை தொடங்கும் பகுதியில் இருந்து சக்தி நகா் வரை முற்றிலுமாக சேரும் சகதியுமாக சாலை உள்ளது.

மாறியது. சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இதனால் கொதிப்புற்ற பொதுமக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ழியுமாக உள்ளதால் பேருந்து சேவையும் அவ்வப்போது தங்களது கிராமத்திற்கு நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துறையினா் பேச்சு நடத்தினா். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.