தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சி.கே. மங்கலம் மேம்பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை.

News image

சி.கே. மங்கலம் மேம்பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை.

Updated On :20 மார்ச் 2026, 7:08 pm

திருவாடானை அருகே சி.கே. மங்கலம்- திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் அணுகு சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.

இந்தச் சாலை வழியாக அரசூா், தேவகோட்டை, கருமொழி, பாரூா், கோவணி பகுதிகளில் இருந்தும், திருவாடானையில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளுக்கு செல்பவா்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனா். இந்தச் சாலை தரமற்ாக போடப்பட்டதால் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பலா் உயிரிழந்துள்ளனா். பலா் நிரந்தர ஊனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image