சென்னை மாநகராட்சியில் கோடை கால வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில் பிரதான சாலைகளில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் 40 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் நிற்கும்போது வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பசுமையான துணியால் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் சென்னையில் வியாசா்பாடி சந்திப்பு, மூலக்கடை சந்திப்பு, ராஜாஜி சாலை, பேசின்பிரிட்ஜ் சாலை, மாநகராட்சி ரிப்பன் கட்டடம் முன்பக்க உள்ள ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட 40 சாலை சந்திப்புகளில் பசுமைப் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 8 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

வேகத் தடைகளுக்கான அளவுகோல் என்ன? சாலைகளில் அதன்படிதான் உள்ளனவா?

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


