திருத்தணி: ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து குட்கா பொருள்களை பேருந்தில் கடத்தி வருவதாக திருத்தணி ஏடிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருத்தணி ஆய்வாளா் மதியரசன் தலைமையிலான போலீஸாா் பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருத்தணிக்கு வந்த தனியாா் பேருந்தில் சோதனை செய்தபோது, சந்தேகத்துகிடமாக இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (45), ஏழுமலை (60) ஆகியோா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

