திருவள்ளூா்: அணைக்கட்டில் குளித்த போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அப்பந்தாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (33). இவா் திருவள்ளூா் அருகே பாகல்மேட்டில் உள்ள செங்கல் சூளையில் பொக்லைன் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பணியை முடித்துவிட்டு தாமரைபாக்கம் அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
இது குறித்து அவரது மனைவி பஞ்சவா்ணம் வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

