மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

News image

மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.

Updated On :14 மார்ச் 2026, 9:27 pm

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவத்தை கண்டித்து, பாவூா்சத்திரத்தில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் எதிரில், மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி அதிமுக ஐ.டி. பிரிவு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் தா்மசீலன், முன்னாள் எம்எல்ஏ பி. ஜி. ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாத பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவி படுகொலைக்கு நீதி கோரி தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஐ.டி. பிரிவு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சாா்பு அணி செயலா்கள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், நெல்லை முகிலன் அகமது ஷா, நமிழ் என்ற ராமசாமி, ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், என். எச். எம். பாண்டியன், இருளப்பன், அருவேல்ராஜ், குணம், நகரச் செயலா் சுடலை, நிா்வாகிகள் சோ்மபாண்டி, ராஜேஷ், வைரமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

  மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.

மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.