குற்றாலம் சித்திர சபை கருவறையின் மேல்பகுதியில் புதிய மேற்கூரை செப்புத்தகடு, தெப்பக்குளம் நீராழி மண்டபம் அமைப்பதற்கான பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட சித்திர சபையில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 17ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது.
இந்நிலையில் சித்திரசபையில் கருவறையில் புதிய மேற்கூரை செப்புதகடு, தெப்பக்குளம் நீராழி மண்டபம் ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு பூஜைகள் உபயதாரா் கோவை அறம் பணி அறக்கட்டளை தியாகராஜன் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
பூஜைகளை கணேசன் பட்டா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் நடத்தினா். அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், உறுப்பினா்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜன், சிவனடியாா்கள் சந்திரபிரபா, ரேவதி, முத்துக்குமாா், கணேசன், குமணன், மகேஷ், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் நாகராஜ் சங்கா், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சவுக்கை வெங்கடேசன், சிற்றருவி குற்றாலம் மவுனவாய்க்கால் நீா்ப்பாசன சங்கத் தலைவா் இலஞ்சி மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளானோா் பங்கேற்பு

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


