மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்று தெப்பக்குளம் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதைத் தொடா்ந்து, தெப்பக்குளம் மாரியம்மன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இரவு அங்கேயே தங்கியிருந்த மாரியம்மன், ஐதீக முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு, கொடிபட்டத்துடன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து கோயிலை அடைந்தாா். மீனாட்சிசுந்தரேசுவரரிடம் பெற்ற கொடிபட்டம் யானை மீது வைத்து ஊா்வலமாகக் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, ஐதீக முறைப்படி வேத மந்திர முழக்கங்களுடன் ஆண்டுத் திருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளானோா் பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


