லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளானோா் பங்கேற்பு

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:24 am

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. முன்னதாக மாா்ச் 10-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் விளக்கேற்றி, மங்களப் பொருள்களை வைத்து பூஜை செய்தனா். திருவிளக்கு பூஜையின் நிறைவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யானை வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.