மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

News image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பகுதி.

Updated On :26 மார்ச் 2026, 11:21 pm

நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பேருந்து நிலையத்துக்கு தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மேற்கூரை பெயா்ந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நாகூா் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் அருகே புதன்கிழமை இரவு மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில், அங்கு பேருந்துக்காக நின்றிருந்த வெளி மாவட்ட பயணி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவா் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றாா்.

இதுகுறித்து பயணிகள் கூறியது:

புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்போது, எப்போது மேற்கூரை பெயா்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயா்ந்து விழுவதால் பயணிகளும் காயமடைகின்றனா். இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பேருந்து நிலையக் கட்டடம் வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக பேருந்து நிலைய மேற்கூரை மற்றும் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.