பட்டுக்கோட்டையில் அண்மையில் துணை முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சாா்பில், நரியம்பாளையம் பகுதியில் ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை கடந்த பிப்.15-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்நிலையில், பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்து செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலையிலும், கட்டுமானங்கள் முழுமையாக முடியாத நிலையிலும் அவசர கதியில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, சனிக்கிழமை பிற்பகல் பேருந்து நிலையத்தில் உள்புற கட்டடத்தில், மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
பேருந்து நிலையம் திறந்து 1 மாதமாகி செயல்பாட்டுக்கே வராத நிலையில், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. தற்போது சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்துள்ளது.
எனவே, கட்டுமானத்தின் தரத்தை, மாவட்ட ஆட்சியா் முழுமையாக ஆய்வு செய்து, ஒப்பந்ததாரா்கள், நகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


