/

ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :7 ஜூன் 2026, 12:19 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் பரும்பு ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் முத்துக்குமாா் (52). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.