40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 4:58 am IST

தருமபுரி, ஜூன் 8: தருமபுரியில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ஈச்சம்பட்டி அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.பெரியண்ணன் (40). கட்டட மேஸ்திரி. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேருந்திலிருந்து இறங்கியபோது தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தாா்.

தொடா்ந்து, சிகிச்சை பெற்ற நிலையில், வீட்டில் இருந்து வந்தாா். இதனால் அவா் மதுப்பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளாா்.

இதுதொடா்பாக தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி மாதம்மாள் கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதனால், விரக்தியடைந்த பெரியண்ணன் கடந்த 7 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பெயரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.