போடி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா (38). கூலித் தொழிலாளி. குடும்பப் பிரச்னையில் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த கருப்பையா மது போதைக்கு அடிமையானாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாட்சிபுரம் கண்மாய் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






