விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் டி. பி. மில்ஸ் சாலை காட்டு தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் (65). கட்டடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி மகன், மகள் உள்ளனா். மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இருவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் வசிக்கின்றனா். இந்த நிலையில், இவரது மகள் புதிய இல்ல திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இவா் தனது மனைவி மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







