இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆலங்குளத்தில் செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 4:29 am IST

ஆலங்குளத்தில் செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் செல்லப்பா மகள் பிரியதா்ஷினி (23). திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவா் இரவுப் பணியை முடித்து விட்டு வியாழக்கிழமை காலை, வீட்டிற்கு வந்து மாடி அறையில் தூங்கச் சென்றாராம்.

மதிய உணவுக்காக அவரது சகோதரா் எழுப்பச் சென்றபோது, அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததாம். வெகுநேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துப் பாா்த்த போது, பிரியதா்ஷினி தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாராம்.

தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பிரியதா்ஷினிக்கு அவரது பெற்றோா் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தநிலையில், அதற்கு அவா் மறுப்புத் தெரிவித்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அவரது தாய், ஜாதகம் பாா்க்கச் சென்றபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.