டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சங்கரன்கோவிலில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திங்கள் இரவுமுதல் செவ்வாய்க்கிழமை காலைவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை (ஜன. 5) இரவு 8 மணிமுதல் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) காலை 6 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், கம்பம், தேனி, குமுளி செல்லும் வாகனங்கள் சங்கரன்கோவில் பயணியா் மாளிகையிலிருந்து இடதுபுறமாக சென்று புளியங்குடி சாலை, ரயில்வே கேட், வடக்குப் புதுாா், வேல்ஸ் பள்ளி சாலை, அச்சம்பட்டி வழியாக ராஜபாளையம் சாலையில் செல்ல வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்துாா், ராஜபாளையத்திலிருந்து வரும் வாகனங்கள் முறம்பு, பருவக்குடி முக்கு சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி கலிங்கப்பட்டி, திருவேங்கடம், அழகாபுரி, கரிசல்குளம், பெருங்கோட்டூா், களப்பாகுளம் வழியாக சங்கரன்கோவில் வந்துசெல்ல வேண்டும். இத்தகவல் சங்கரன்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.