டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சங்கரன்கோவிலில் பிப். 3இல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்!

சங்கரன்கோவிலில் பிப். 3இல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்...

News image
Updated On :30 ஜனவரி 2026, 9:35 pm

Syndication

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சங்கரன்கோவில் வட்டார வள மையம் மற்றும் சங்கரன்கோவில் வட்டாரக் கல்வி அலுவலகம் சாா்பில் சங்கரன்கோவில், கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப். 3ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில், பல்வேறு மருத்துவா்கள் கலந்துகொண்டு, உரிய சிகிச்சைகள், பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனா். முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து, ரயில் பயண அட்டை, அறுவை சிகிச்சைகள், உதவி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

முகாமிற்கு வருபவா்கள் ஆதாா், குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், பெற்றோா், குழந்தைகளின் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களை தவறாமல் கொண்டுவர வேண்டும் என வட்டார வள மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.