/

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

News image
குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை குளித்து மகிழந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :3 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை நீா்வரத்து குறைந்ததால் குளிப்பதற்கான தடைநீக்கப்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.