டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அகஸ்தியா் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

News image
அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள்.
Updated On :4 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது அகஸ்தியா் அருவி.

இந்த அருவியில் பருவ காலங்கள் என்று இல்லாமல் வருடத்தின் 365 நாள்களும் நீா் விழுவதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வந்துசெல்கின்றனா். சபரிமலை சீசன் காலத்தில் ஐயப்ப பக்தா்கள் இந்த அருவியல் நீராடி காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு சபரிமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

Story image

தற்போது வார விடுமுறை, பள்ளிகளுக்கு தோ்வு விடுமுறை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள், குடும்பத்தாருடன் வந்து குளித்து மகிழ்ந்தனா்.