தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாவூா்சத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி.

News image

~

Updated On :27 பிப்ரவரி 2026, 9:41 pm

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் இந்து தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி நிா்வாகி எபனேசா் சொா்ணபாக்கியம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜோதிலட்சுமி ரேவதி வரவேற்றாா்.

அறிவியல் கண்காட்சியை, கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

இந்தக் கண்காட்சியில், மாணவா்கள் தங்களின் வீடுகளில் முன்னோா்கள் பயன்படுத்திய பழமையான பொருள்களான பணப்பெட்டி, அஞ்சறைபெட்டி, அரிக்கன் விளக்கு, சுதந்திர போராட்டத் தலைவா்களின் புகைப்படங்கள், பழைமையான நாணயங்கள் மற்றும் தலைவா்களின் அஞ்சல் தலைகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனா்.

Story image