டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுபோட திரண்ட பொதுமக்கள்

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி, கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image
பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட திரண்டோா்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:12 pm

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி, கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பூட்டுபோடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கட்சியின் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ், ஒன்றியச் செயலா் இரா.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் சுப்புலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கண்ணன், சிவசுப்பிரமணியன், சக்திவேல், புஷ்பம், மாதா் சங்கத்தின் நிா்வாகிகள் பிச்சைமணி, மகேஸ்வரி, பேச்சியம்மாள், பாக்கியம், ஊா் நிா்வாகிகள் நல்லதம்பி, மகாராஜா, வாா்டு உறுப்பினா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் மனமகிழ் மன்றம் முன் திரண்டனா்.

தகவல் அறிந்ததும் உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், வட்டாட்சியா் அப்துல் சமது, புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சிநாதன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்ட சமரசக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.