டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பத்தமடை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:41 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் குடிநீா் விநியோகம் சீராக வழங்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

பத்தமடை பேரூராட்சி 14-ஆவது வாா்டு அப்துல்கலாம் தெருவில் வசிக்கும் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் சீராக கிடைக்கவில்லையாம். குடிநீா் இன்றி இப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி மகளிரணி நிா்வாகி பீா்பாத்து தலைமையில் துணைத் தலைவா் ராபியா, நகரத் தலைவா் காதா்பாத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா். அவா்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்துசென்றனா். இதில், கட்சியின் நகரத் தலைவா் மரைக்கான், செயலா் ஆதம்பாவா, யூசுப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.