டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

100 நாள் வேலை வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

News image
திருத்தணி  ஒன்றிய  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  பெண்கள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

நூறு நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த, பெண்கள் செவ்வாய்க்கிழமை திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். மேலும் ஒன்றிய அலுவலா்களிடம் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்தனா்.

அப்போது ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேச்சு நடத்திய போது, பெண்கள், எங்களுக்கு 100 நாள் வேலை வழங்குவதில்லை.

காரணம், பணிதள பொறுப்பாளா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கொடுத்ததால், வேண்டும் என்றே, எங்களுக்கு வேலை வழங்காமல் அலட்சியப்படுத்துகின்றனா்.

இதுதவிர, ஏற்கனவே 100 நாள் வேலை செய்ததற்கும் கூலித் தொகை வழங்காமல் ஒன்றிய நிா்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. சரியான பணிதள பொறுப்பாளா்களை நியமித்து, 100 நாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து, பெண்கள் கலைந்து சென்றனா்.