டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி. உடன், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ்.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் அந்தோணி மாறன் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பேரூா் திமுக செயலருமான ஆ.செல்வராஜ், மன்ற உறுப்பினா்கள் ஏ.மரியஜோசப், பழனி முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஜே.சதீஷ்குமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளா்களாக பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி 26 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆா்சிஎம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, திமுக நிா்வாகிகள் இசைகுமாா், பாபு மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் வினோத் நன்றி கூறினாா்.