கடையநல்லூரில் கபடி போட்டி


தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நடைபெற்ற கபடி போட்டியில் கடையநல்லூா் ஏஐகே அணி முதலிடம் பெற்றது.
கடையநல்லூா் கோல்டு ஏஐகே, எம்ஆா்கே ஸ்போா்ட்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்போட்டிக்கு, ஏஐகே நிறுவனா் நைனா முகம்மது அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் ஜாவித், நோட்டரி வழக்குரைஞா் முருகையா பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன.
கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், தவெக மாவட்டச் செயலா் நியாஸ், காசிராஜன் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். இறுதிப் போட்டியில், ஏஐகே கடையநல்லூா் அணியும், புளியங்குடி மதுரா அணியும் மோதியதில் கடையநல்லூா் அணி முதல் பரிசு பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் மா. செல்லதுரை பரிசு வழங்கினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...