தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக ஆதரவுடன் முதல்வராகலாம் என்றது யார்? செங்கோட்டையன் கேள்வி

திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக அவர் (எடப்பாடி பழனிசாமி) விரும்பியதாக அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 11:44 am IST

திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக அவர் (எடப்பாடி பழனிசாமி) விரும்பியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தவெகவில் மற்ற கட்சியினர் இணைவது குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, தவெகவில் குதிரை பேரம் நடப்பதாக சிலர் கூறுகின்றனர். முதன்முதலில் குதிரை பேரம் பேசியது யார்?

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்வராகலாம் என்று சொன்னது யார்? தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுகவுக்கும் திமுகவுக்கு கூட்டணி இதுவரையில் நடந்திருக்கிறதா?

ஜெயலலிதா மீது வழக்கு போட்டு, சிறையிலடைத்தவர்களுடன் இணைந்து முதல்வராக வேண்டும் என்று சொல்பவர் அதிமுகவை சேர்ந்தவர்தானா என்பதுதான் என்னுடைய கேள்வி.

யார் குதிரை பேரம் நடத்தினார்கள் என்பதுதான் இன்று தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. சிலர் ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு (தவெக) இணைகின்றனர். அவர்கள் ராஜிநாமா செய்வதற்குக் காரணம் என்னவென்றால், திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்கவிருப்பதாகக் கூறப்பட்டதால்தான். இது தமிழ்நாட்டில் இதுவரையிலும் நடைபெறாத ஒன்று.

எங்களைப் பொருத்தவரை, எங்களுக்கு குதிரை பேரம் தேவையில்லை. ஏனெனில், தனித்து நின்று வெற்றி பெற்ற ஓர் இயக்கம், இரண்டே ஆண்டுகளில் பண நாயகத்தை முறியடித்து, ஜனநாயகத்தை உருவாக்கியிருக்கிற மக்கள் இயக்கம்.

இந்தியாவில் எந்தவோர் இயக்கத்துக்கும் இதுபோன்ற வரலாறு இல்லை.

அதிமுகவின் இரண்டாம் கட்டப் பொறுப்பாளர்கள் இனியும் அங்கு நீடித்திருப்பது சரியாக இருக்காது. ஏனெனில், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிற ஒரு பொதுச் செயலாளரை நம்பி, இந்த இயக்கத்தில் இருக்கக் கூடாது என முடிவு செய்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Summary

Minister K.A. Sengottaiyan states that EPS desired to form an alliance with the DMK and become Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.