திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டப்பேரவை செயலருடன் ஓ.எஸ். மணியன் சந்திப்பு!

அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் ஓ.எஸ். மணியன் கடிதம் அளித்துள்ளது தொடர்பாக....

News image

சட்டப்பேரவை செயலர் அலுவலகத்தில் ஓ.எஸ். மணியன் - எக்ஸ்

Updated On :26 மே 2026, 6:39 pm IST

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி அதிமுக உறுப்பினர் ஓ.எஸ். மணியன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் வழங்கினர்.

அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் சிலர் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புடன் பிரிந்து சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் திரும்பும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் (22 பேர்) தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

திடீர் திருப்பமாக எஸ்.பி. வேலுமணி அணியில் செயல்பட்டு வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (மே 26) அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

இதனிடையே வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், ஓசூர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கோரி, சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

இதனால், சி.வி. சண்முகம் அணி அதிமுக உறுப்பினர்களின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Summary

ADMK MLA return to edappadi palanisamy O.S. Manian Writes Letter Seeking Apology

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.