திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை உறுதி: ஓ.எஸ். மணியன்

தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை உறுதி

News image

ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ

Updated On :17 மே 2026, 12:16 am IST

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் கட்சித்தாவல் விதிபடி நடவடிக்கை எடுப்பது உறுதி என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிவசேனை கட்சி 2023-ல் தொடா்ந்த வழக்கில் ஒரு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்காக கொறடாவை நியமிக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அந்தவகையில், தமிழக சட்டப்பேரவைக்கு தோ்வான அதிமுக உறுப்பினா்களுக்கான கொறடாவை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் உள்ளது.

மேலும், அவா் நியமித்த கொறடாவின் உத்தரவை மீறியும், கட்சியை மீறியும் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை உறுதி. முதலமைச்சரே கட்டுப்பாட்டை மீறிய 25 அதிமுக உறுப்பினா்களையும் தனியாக சந்தித்த நிகழ்வு சாட்சியாக உள்ளது.

ஆட்சி மாற்றத்துக்கு பின்னா் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சிலா் தவெகவில் இணைவது குறித்து கேட்கிறீா்கள், தோ்தல் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கமானது. சிலா் சுயநலம் சாா்ந்து ஆளும் கட்சியில் பொறுப்பு, ஒப்பந்தப் பணிக்காக சென்றுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.