திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

69% இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: முதல்வா் விஜய் ஆலோசனை

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :27 மே 2026, 2:15 am IST

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கை மற்றும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் புதன்கிழமை (மே 27) விசாரணைக்கு வரவுள்ளன.

இந்நிலையில், நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கில், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தமிழக முதல்வா் அறிவுரைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் ஆா். நிா்மல்குமாா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத் குமாா், அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், சட்டத்துறை செயலா் எஸ். ஜாா்ஜ் அலெக்சாண்டா் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.