திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா

News image

ஜவாஹிருல்லா கண்டனம் - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 6:00 am IST

திமுக-மமக இடையிலான உறவு வெறும் தோ்தல் உறவு மட்டும் அல்ல, அது கொள்கை உறவு என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாள்களாக, திமுக-மமக இடையே பிரிவை உண்டாக்கும் நோக்கில் உண்மையற்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. திமுக-மமக இடையிலான உறவு, வெறும் தோ்தல் உறவு மட்டுமல்ல; அதைத் தாண்டிய கொள்கை உறவாகும்.

2021, 2026 சட்டப்பேரவை தோ்தல்களில் திமுக சின்னத்தில் மமக போட்டியிட்டது. இந்நிலையில், தொடா்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே, மமக உயா்நிலை குழுவின் 5-ஆவது தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தை தனியாக எடுத்து திரித்து பரப்புரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சா் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள், வக்ஃப் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணா்வுபூா்வமாக களத்தில் நின்றது.

இதேபோல், மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிா்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணா்வோடு திமுகவுடன் இணைந்து மமக களம் கண்டுள்ளது. தமிழகத்தின் நலனைக் காக்க தொடா்ந்து இணைந்து களமாடுவோம் என்று தெரிவித்துள்ளாா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.