திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து ராஜிநாமா: மரகதம் குமரவேல்

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து விலகியதாக மரகதம் குமரவேல் விளக்கம்...

News image

தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா - எக்ஸ்

Updated On :25 மே 2026, 9:05 pm IST

திமுகவுடன் அதிமுக இணைவதை தாங்கள் விரும்பவில்லை என்பதாலும், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததாலும் அக்கட்சியில் இருந்து விலகியதாக மரகதம் குமரவேல் இன்று (மே 25) தெரிவித்தார்.

சுயநலனுக்காக ராஜிநாமா முடிவை எடுக்கவில்லை என்றும், தொகுதி மக்களின் கோரிக்கையை முன்வைத்து ராஜிநாமா நிலைப்பாட்டை எடுத்ததாகவும் விளக்கம் அளித்தனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்களும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களுமாக அதிமுக பிரிந்தது.

சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த பிறகு மூவரும் தவெகவில் இணைந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்து உறுப்பினர் அட்டையை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுடன் பேசியதாவது:

''நாங்கள் பதவி விலகக் காரணம் என்ன என்பதைக் கூற கடமைப்பட்டுள்ளோம். திமுகவுடன் அதிமுக இணைவதை நாங்கள் விரும்பவில்லை. திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். அதிமுகவுக்கு அவர் துரோகம் இழைத்தார்.

சுயநலனுக்காக ராஜிநாமா முடிவை எடுக்கவில்லை. சட்டப்பேரவையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. தொகுதிகளில் எங்களைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், தொகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுதான் ராஜிநாமா நிலைப்பாட்டை நாங்கள் மூவரும் எடுத்தோம்.

பதவியேற்று 15 நாள்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பெண்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை முதல்வர் விஜய் முன்னெடுத்துள்ளார். பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்கள் பணி செய்கிறார்.

முன்பு போட்டியிட்ட தொகுதியில் மீண்டும் போட்டியிடுவோமா? என்பது குறித்து முதல்வர் விஜய் முடிவு செய்வார்'' என மரகதம் குமரவேல் பேசினார்.

Summary

I Do Not Wish to Join the DMK Maragatham Kumravel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.