பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடபாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:
''பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், சகோதரர் அண்னாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரர் அண்ணாமலை தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை தலைவராக நியமித்தது. நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, மாநில பாஜகவின் உள்கட்சி பூசல்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறை செயலாளர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மேலிடத்தில் அழைப்பின்பேரில் நயினார் நாகேந்திரனும் தில்லுக்குச் சென்றுள்ளார்.
Summary
Edappadi palanisamy Extends Birthday Wishes to BJP Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









