வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், செங்கோட்டையன் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றே சிகிச்சை முடிந்துவிடும் என்றும், நாளை செங்கோட்டையன் சென்னை செல்வார் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு முதலில் நிதித் துறை இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த இலாகா மாற்றப்பட்டு வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
“நிதித் துறை அமைச்சர் சென்னையில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும். நான் மக்களோடு மக்களாக பணியாற்ற விரும்புகிறேன். அதனால்தான் வருவாய்த் துறை அமைச்சர் பொறுப்பை கேட்டு பெற்றுள்ளேன்” என்று செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தார்.
Summary
Revenue Minister Sengottaiyan has been admitted to a private hospital in Coimbatore due to illness.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திறந்த மனதோடு இருக்கிறோம்! அமைச்சர் செங்கோட்டையன்!

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்







