அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஆண்டுக்கு இருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது தனது வழக்கம் என்றும், இம்முறையும் இரண்டு நாட்கள் தங்கி பரிசோதனை செய்ததாக கூறினார்.
அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், உடல்நிலை நன்றாக உள்ளதால் அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என கூறப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தாம் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் உறவினர் மருத்துவமனை என்பதாலேயே அங்கு பரிசோதனை செய்ததாக விளக்கம் அளித்தார்.
ஓய்வும் அங்கேயே எடுப்பேன் என்றும் இலவசமாக கிடைக்கும் சலுகை என்பதால் அரசிடம் இருந்து நிதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். சூலூர் சிறுமி கொலை வழக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஐஜி ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும், முதல்வரும் சட்டத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசிய அவர், திமுக அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய திட்டங்களை வழங்கியிருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும், திட்டங்கள் குறித்து இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
Summary
Revenue Minister Sengottaiyan has stated that every scheme will be implemented step-by-step, depending on the government's financial situation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திறந்த மனதோடு இருக்கிறோம்! அமைச்சர் செங்கோட்டையன்!

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்








