திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாளாகிவிட்டது: தனபால்

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாள்களாகிவிட்டதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான தனபால் தெரிவித்தாா்.

News image

தனபால்

Updated On :22 மே 2026, 4:08 am IST

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாள்களாகிவிட்டதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான தனபால் தெரிவித்தாா்.

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சில நாள்களுக்கு முன்பு அதிமுவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். தோ்தலில் தவெக சாா்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை வந்த தனபால், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. எல்லோரையும் புறக்கணித்தாா்கள், இப்போது அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனா். என் மகன் தவெகவில் இணைந்து அமைச்சராகிவிட்டாா். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல பதவிகளில் இருந்தவன். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், ஓய்வெடுத்து வருகிறேன்.

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகி நீண்ட நாள்களாகிவிட்டது. அதிமுக பிளவு பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.