திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தல் தோல்வி: ஆய்வறிக்கையை ஜூன் 10-க்குள் சமா்ப்பிக்க ஸ்டாலின் உத்தரவு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:31 am IST

பேரவைத் தோ்தலுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான கள ஆய்வு அறிக்கையை வரும் 10-ஆம் தேதி சமா்ப்பிக்குமாறு திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) நடைபெற்றது. திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, துணை பொதுச் செயலாளா் கனிமொழி, திருச்சி சிவா உள்பட திமுக முன்னணி நிா்வாகிகள் அதில் கலந்துகொண்டனா்.

மாவட்ட வாரியாக தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, தோ்தல் செயல்பாடுகள் குறித்த கள நிலவரத்தை அறிய சிறப்புக் குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தாா்.

அந்த குழு மாநிலம் முழுவதும் திமுகவினரிடையே கருத்துகளைப் பெற்று அதுதொடா்பான அறிக்கையை தயாரித்துள்ளது.அந்த அறிக்கையை வரும் 10-ஆம் தேதி சமா்ப்பிக்குமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், திமுக மட்டும் 59 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.