தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News image

ஆதவ் அர்ஜுனா

Updated On :18 மே 2026, 9:09 am IST

சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இங்கு உள்ள கட்டுமான பணிகள், ஹாஸ்டல் உணவு, விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தேன். விளையாட்டுத் துறை அமைச்சர் என்பதை விட இதே இடத்தில் ஒரு ஹாஸ்டல் மாணவராக இருந்த விளையாட்டு வீரர் நான்.

இது என் வீடு. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் விளையாட்டு அவசியம். பிரேசிலில் போதை பழக்கம் அதிகமாக இருந்தபோது, அந்த அரசு விளையாட்டில் முக்கியத்துவம் கொடுத்ததால் அதில் முதலிடம் பெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு விளையாட்டுத் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளியிலிருந்தே கல்விக்கு நிகராக விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தி இருக்கிறார்.

அதே போல சர்வதேச அளவில் போட்டிகள் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டார். ஆய்வு செய்தபின் மாணவர்களுடன் அமைச்சர் உரையாடி மகிழ்ந்தார்.

Summary

Public Works and Sports Minister Adhav Arjuna inspected the Nehru Indoor Stadium in Periyamedu, Chennai today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.