17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

பிகாரில் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

News image

தீ விபத்து ஏற்பட்ட பயணிகள் ரயில். - Photo grab X video.

Updated On :18 மே 2026, 8:37 am IST

பிகாரில் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

பிகார் மாநிலம், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சசாரம்-பாட்னா பயணிகள் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எந்தப் பயணியும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. மின்கசிவு காரணமாக ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று மத்திய பிரதேசத்தில் ராஜதானி விரைவு ரயிலின் ஏ.சி. பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

A major fire broke out in a coach of the Sasaram-Patna passenger train at Sasaram railway station in Bihar’s Rohtas district on Monday while the train was stationed at the platform, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.