தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு, படிப்படியாக நடைபெறும் என்று நிதியமைச்சர் நிதி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு சனிக்கிழமை (மே 16) துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில், சில முக்கியத் துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதுகுறித்து நிதியமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “பொதுவாக எப்போதுமே அப்படித்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, முதலில் ஏழு பேரைத்தான் அமைச்சர்களாக நியமனம் செய்தார். எனவே, படிப்படியாகத்தான் செய்ய முடியும். மேலும், அதை எப்படி இயக்குவது என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்.
நிதி நெருக்கடியைப் பொறுத்தவரையில், அதைச் சமாளிக்கின்ற திறமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வரிடம் இருக்கிறது. பொருளாதாரம் குறித்து படிப்படியாக ஆய்வு செய்துதான் அதற்கான தெளிவான விளக்கத்தைத் தர முடியும்.
பொதுவாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் இயக்கம் அவரால் வலுவிழந்துள்ளது. தான் ஒருவர் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் எனத் தெரிவித்தார்.
Summary
Responding to a question regarding the cabinet expansion in Tamil Nadu, Finance Minister K.A. Sengottaiyan stated that it would take place in a phased manner.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









