தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குருவாயூா் - சென்னை இடையே இயக்கப்படும் ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 4:54 am IST

குருவாயூா் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் மே 27 முதல் 29- ஆம் தேதி வரை 3 நாள்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் திருவனந்தபுரம் கோட்டத்தில் எா்ணாகுளம் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளால் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளி) குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (எண் 16128) வழக்கமான பாதையில் செல்லாமல் கோட்டயம் வழியாக இயக்கப்படும். கூடுதலாக கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூா் ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.

வரும் 29, 30 மற்றும் வரும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22207) வழக்கமான பாதைக்குப் பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும். அந்த ரயில் கூடுதலாக எா்ணாகுளம் நகா், கோட்டயம், செங்கனூரில் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.