போத்தனூா்- சென்னை சென்ட்ரல் நிலையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை 9 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு விவரம்: போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) காலை 7.40 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









