தமிழ் செய்திகள்
நாட்டின் விடுதலைக்குப் பிறகு, கோட் சூட் அணிந்து முதல் முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
விழாவில் விஜய் கோட் சூட் அணிந்துகொண்டு பதவியேற்ற நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு, கோட் சூட் அணிந்து பதவியேற்ற முதல் முதல்வர் என்ற பெருமையை சி. ஜோசப் விஜய் பெற்றுள்ளார்

முதல்வர் விஜய் - PTI
நாட்டின் விடுதலைக்குப் பிறகு, ஓ.பி. ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், எம். பகவத்சலம், சி.என். அண்ணாதுரை, வி.ஆர். நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிடோரும், தற்போது சி. ஜோசப் விஜய்யும் முதல்வராகப் பதவியேற்றுள்ளனர். ஆனால், விஜய்தான் முதல்முறையாக கோட் சூட் அணிந்துகொண்டு முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.
Summary
The first Chief Minister to take oath wearing a suit is C Joseph Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






