கோயில் சொத்துகளை பாதுகாத்து முறையாக நிா்வகிப்பது இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கடமை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருத்தொண்டா் அறக்கட்டளை தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் அறுபத்து மூவா், பிரம்மோற்சவம் விழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்த கோயிலின் வரவு செலவு விவரங்களை இந்துசமய அறநிலையத்துறையின் தணிக்கைப் பிரிவு தணிக்கை செய்துள்ளது.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட அறிக்கையில் கோயில் நிலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக விசாரித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை ஆணையரிடம் கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், மனுதாரா் கொடுத்த புகாா் அறநிலையத்துறை ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. புகாரை பரிசீலித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துகளை பாதுகாத்து கோயிலை முறையாக நிா்வகிப்பது அதிகாரிகளின் கடமை. அறநிலையத்துறை தணிக்கைக் குழுவின் அறிக்கையில் கோயில் நிா்வாகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுப்பது அறநிலையத்துறை ஆணையரின் கடமை.
நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது சட்டபூா்வ கடமையை செய்ய தவறியதற்கு சமம். எனவே, மனுதாரா் புகாரை 12 வாரங்களில் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், ஓ.பன்னீா்செல்வம் மனு

அதிகாரிகள் சரியான உத்தரவை பிறப்பிப்பது இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

கோயில் நிதி முதலீடு அரசாணைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு







