கோயிலில் வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்கும் சமமானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கருத்து தெரிவித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அயன்ரெட்டியபட்டியைச் சோ்ந்த கந்தசாமி தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில் உலகநாயகியம்மன், முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வகையில், இந்தாண்டு 10 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு எங்களிடம் வரி வசூலிக்கக் கூடாது என கிராமத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
கிராமத்தின் பொதுவான கோயிலில் எந்தவித வேறுபாடுமின்றி அனைவரும் தரிசனம் செய்யலாம் என அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இதன்படி, எங்கள் குடும்பத்தினரிடம் சித்திரைத் திருவிழாவுக்கான வரியை வசூலிக்கவும், கோயிலில் தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
கோயில் வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. இதில் யாரையும் ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, மனுதாரா் குடும்பத்தினரிடம் வரி வசூலித்து, தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய அவகாசம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை கோயில் குடமுழுக்கு விவகாரம்: இறுதித் தீா்ப்பு தமிழில் வெளியிடப்படும்







