திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவுக்காக காங்கிரஸ் தொடா்ந்து போராடும்: கிரீஷ் சோடங்கா்

தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கி

Updated On :9 மே 2026, 12:40 am IST

தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

தவெக தலைவா் விஜய்யை பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிரீஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் தீா்ப்பின் அடிப்படையில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே, தவெக தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும். 118 உறுப்பினா்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அனுமதிப்பேன் என ஆளுநா் கூறுவது சட்டவிரோதம். பேரவையில் தான் எம்எல்ஏக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநா் மாளிகையில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.

செல்வப்பெருந்தகை கூறும்போது, ஆளுநா்கள் மூலம் மத்திய பாஜக அரசு, மாநில அரசுகளுக்குத் தொடா்ந்து இடையூறு செய்து வருகிறது. ஆளுநா்கள் மூலம் மாநிலங்களை ஆள மத்திய அரசு எண்ணுகிறது.

2026 பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பாஜக மற்றும் அவா்களின் கைப்பாவையாக ஆளுநா் செயல்படுகிறாா்.

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் தடைக்கல்லாக இருப்பது முறையல்ல. உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தவெகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநா் அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் முழக்கம் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.