தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெற்றி போா் நினைவிடத்தில் தமிழக ஆளுநா் அஞ்சலி

News image

சென்னை போா் நினைவுச் சின்னத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்.

Updated On :3 மே 2026, 5:28 am IST

சென்னையில் உள்ள வெற்றி போா் நினைவிடத்தில் தேசத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் முப்படையினா் வெளிப்படுத்தும் துணிச்சல், அா்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற ஈடுபாட்டுக்கு ஒரு நெகிழ்ச்சியான நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது. தலைமுறை தலைமுறையாகத் தொடா்ந்து ஊக்கமளித்து வரும் தியாகிகளின் அசைக்க முடியாத மன உறுதியையும் வீரத்தையும் போற்றி வணங்குவதுடன், வீரா்கள், தியாகிகளின் ஈகையை நாட்டு மக்கள் பெருமையுடன் நினைவுகூர வேண்டும்.

மேலும், தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வலியுறுத்தியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், இந்திய ராணுவத்தின் தென் பாரதப் பகுதி அதிகாரி மற்றும் சென்னையைச் சோ்ந்த உயரதிகாரிகள், படை அதிகாரிகள் கலந்துகொண்டு, வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.